• Download mobile app
04 Apr 2026, SaturdayEdition - 3706
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியில் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாடு

October 12, 2022 தண்டோரா குழு

கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் ஐ சி டி அகாடமி எனப்படும் தகவல் தொழில்நுட்ப மையம் நடத்தும் இளைஞர் தலைமை பண்பு உச்சி மாநாட்டின் துவக்க விழா கல்லூரியில் வளாகத்தில் நடைபெற்றது. இதில் கல்லூரியின் முதல்வர் ஜேனட் அனைவரையும் வரவேற்று பேசினார்.

ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவரும் நிர்வாக அறங்காவலமாகிய எஸ் மலர்விழி நிகழ்ச்சியை துவக்கி வைத்து உரையாற்றினார். அப்போது, இளைஞர்கள் எவ்வாறு தலைமை பண்புகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்பதை பற்றி விளக்கமாக எடுத்துரைத்தார். ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் நிர்வாக அரங்காவலர் ஆதித்யா நிகழ்ச்சியில் பங்கேற்று சிறப்பு உரையாற்றினார். ஐசிடி அகாடமி தலைமை செயலாளர் பாலசுந்தர் மாநாட்டிற்கு முதன்மை உரையாற்றினார்.

காக்னிசென்ட் நிறுவனத்தின் அரசு தொடர்பான மாநில மென்பொருள் சேவை துறையின் தலைவர் புருஷோத்தமன் சிறப்புரையாற்றினார். இந்த இளைஞர் தலைமை பண்பு மாநாட்டில் தலைமை விருந்தினராக தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி கலந்து கொண்டு தலைமை உரையற்றினார்.

விழாவில் ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதல்வர்கள் மற்றும் டீன்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

மேலும் படிக்க