• Download mobile app
12 May 2025, MondayEdition - 3379
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

புதிய ராணுவ தளபதி 3 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் பயணம்

January 6, 2017 தண்டோரா குழு

இந்திய ராணுவ தளபதி பிபின் ரவாத்தின் அதிகாரபூர்வ முதல் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணம் மேற்கொள்கிறார்.

இது குறித்து இந்திய ராணுவ பாதுகாப்புத் துறை செய்தித் தொடர்பாளர் நிருபர்களிடம் வியாழக்கிழமை (ஜனவரி 5) பேசுகையில்,

“இந்திய ராணுவ தளபதி பிபின் ரவாத் அவர்கள் அதிகாரபூர்வ முதல் பயணமாக ஜம்மு காஷ்மீருக்கு மூன்று நாள் பயணமாகிறார். இந்த பயணத்தின் போது அவர் உதம்பூர், ஸ்ரீநகர், நக்ரோட்டா மற்றும் சியாச்சின் ஆகிய இடங்களைப் பார்வையிடுவார். அத்துடன் குப்வாரா, அனந்த்நாக், அக்னூர் மற்றும் ரஜௌரி ஆகிய ராணுவ இடங்களைச் சந்திப்பார்.அமைதி, சுமுகநிலையைக் கொண்டுவருவதில் வடக்கு கமாண்ட் ஆற்றிய பங்களிப்பை அவர் பாராட்டினார்.

அத்தலங்களில் உள்ள ராணுவ அதிகாரிகள் அங்கு நிலவும் பாதுகாப்பு நிலைமை குறித்து அவருக்கு விளக்குவார்கள். இந்திய ராணுவத் தலைமை அதிகாரியாகப் பொறுப்பேற்ற பிபின் ரவாத் முதலில் சந்திக்கும் ராணுவத் தளம் வடக்கு ராணுவ கட்டுப்பட்டு தளம் ஆகும்” என்றார்.

பிபின் ரவாத் கூறுகையில், “தேசத்தின் பாதுகாப்பிற்கு ஒவ்வொரு ராணுவப் படைவீரரும் முக்கிய பங்கு வகிக்கின்றனர். அவர்களுடைய பங்கினாலும், அர்ப்பணிப்பினாலும் ராணுவம் திறமையாகவும் வலுவாகவும் செயல்படுகிறது” என்றார்.

எதிரிகளின் சாதுர்யமான வியூகத்தை முறியடிக்கவும், போரை எதிர்கொள்ளவும் வலுவான உத்தியை நாம் உருவாக்க வேண்டும்” என்று கூறினார்.

மேலும் படிக்க