• Download mobile app
16 Nov 2025, SundayEdition - 3567
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை மாவட்டத்தில் ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை பயன் படுத்தும் அதிகாரம் ரத்து

September 27, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில் ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை பயன் படுத்தும் அதிகாரம் மாவட்ட ஆட்சித் தலைவரால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு, வட்டார வளர்ச்சி அலுவலகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது.

கோவை மாவட்டம் பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியம் சோமயம்பாளையம் ஊராட்சி தலைவர் ரங்கராஜ் மற்றும் அசோகபுரம் ஊராட்சி தலைவர் ரமேஷ், காரமடை ஒன்றியம் மருதூர் ஊராட்சி தலைவர் பூர்ணிமா ரங்கராஜ் மற்றும் சிக்கதாசம் பாளையம் ஊராட்சி தலைவர் விமலா, அன்னூர் ஒன்றியம் குன்னத்தூர் ஊராட்சி தலைவர் கீதா தங்கராஜ், மதுக்கரை ஒன்றியம் மலுமிச்சம்பட்டி ஊராட்சி தலைவர் பழனியம்மாள், ஆனைமலை ஒன்றியம் தென் சித்தூர் ஊராட்சி தலைவர் செல்வநாயகம் என மேற்கண்ட ஏழு ஊராட்சி மன்றத் தலைவர்கள் மீது பிளிச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு, கிருமி நாசினி தெளித்ததில் கூலி வழங்கியதில் முறைகேடு, கட்டிட வரைப்பட பதிவேட்டின் படி ஊராட்சி மன்ற ஊராட்சி மன்ற அங்கீகாரம் வழங்காமல் 100க்கும் மேற்பட்ட கட்டிடங்களுக்கு அனுமதி வழங்கியதில் முறைகேடு, மின் கட்டணம் செலுத்துவதில் முறைகேடு, குடிநீர் பராமரிப்பு பொருட்கள் வாங்கியதில் முறைகேடு போன்ற பல்வேறு புகார்களின் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனிடையே இந்த ஏழு ஊராட்சி தலைவர்களின் காசோலை பயன் படுத்தும் அதிகாரம் கோவை மாவட்ட ஆட்சியர் சமீரனால் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலகர்களிடம் வழங்கப்பட்டுள்ளது .

மேலும் படிக்க