• Download mobile app
24 Jul 2026, FridayEdition - 3817
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

சாலைகளை சீரமைக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கீடு – மாநகராட்சி ஆணையர்

September 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியில் உள்ள ஐந்து மண்டலங்களில் 100 வார்டுகள் உள்ளன. கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 6,500க்கும் மேற்பட்ட தெருக்கள் உள்ளன. சுமார் 15 லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் ஐடி நிறுவனங்கள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழிற்சாலைகள், பெரிய அளவிலான தொழிற்பேட்டைகள், அலுவலகங்கள், முக்கிய பேருந்து நிலையங்கள், புறவழிச்சாலை செல்வதற்கான இணைப்பு சாலைகள் போன்றவைகள் உள்ளன.

மாநகராட்சி சாலைகளில் மட்டும் தினமும் லட்சக்கணக்காண வாகனங்கள் செல்கின்றன.
இதனிடையே பாதாள சாக்கடை திட்டம், மழை, குடிநீர் குழாய் பதிப்பு போன்ற பல்வேறு காரணங்களுக்காக மாநகராட்சி பகுதிகளில் சாலைகள் தோண்டப்படுகின்றன. இதனாலும், இயற்கை பேரிடர்களாலும் சாலைகள் கடுமையான சேதம் அடைக்கின்றன.
கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழக அரசு சார்பாக ஏற்கனவே ரூ.200 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதியும் சாலைகளின் சீரமைப்புக்காக பல்வேறு கட்டங்களாக விடுவிக்கப்படுகின்றன.

இதனிடையே தமிழ்நாடு ஊரக கட்டமைப்பு திட்டத்தின் கீழ் சாலைகளை சீரமைக்க ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கோவை மாநகராட்சி கமிஷனர் பிரதாப் கூறுகையில்,

‘‘கோவை மாநகராட்சியில் உள்ள சாலைகளை சீரமைக்க தமிழ்நாடு ஊரக கட்டமைப்பு திட்டத்தின் கீழ் ரூ.26 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில் இருந்து தண்ணீர் பந்தல் சாலை உள்பட 112 சாலைகள் 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு சீரமைக்கப்பட உள்ளன’’ என்றார்.

மேலும் படிக்க