• Download mobile app
05 May 2024, SundayEdition - 3007
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வால்பாறை தனியார் தோட்டத்தில் புலிகள் மற்றும் கரடி நடமாட்டம்

September 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகம் பகுதிகளில் காட்டுயானை -புலி -கரடி – சிறுத்தை – கரு சிறுத்தை- புள்ளி மான் – வரையாடு மற்றும் அபூர்வகையான பறவைகள் உள்ளன.

வனப்பகுதி ஒட்டி தனியார் தேயிலை தோட்டம் பகுதிகள் நிறைந்தது என்பதால் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகம் உள்ளது,வனத்துறையினர் வனவிலங்குகள் நடமாட்டம் உள்ளதால் இரவு நேரங்களில் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம் அறிவுறுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் சவரங்காடு தேயிலை தோட்டத்தில் இரண்டு புலிகள் சென்றதை அப்பகுதி பொதுமக்கள் எடுத்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகின்றது. மேலும் பகலில் புலிகள் நடமாட்டம் உள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு வனத்துறையினர் ஒளிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தி உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க