• Download mobile app
28 Oct 2025, TuesdayEdition - 3548
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் பெரிய குளத்தில் படகில் சென்று வானதி சீனிவாசன் ஆய்வு !

August 29, 2022 தண்டோரா குழு

கோவை பெரிய குளம் மற்றும் வாலாங்குளத்தில் அண்மையில் படகு சவாரி தொடங்கப்பட்டது. இது பொதுமக்கள் இடையே நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இந்நிலையில்,உக்கடம் குளத்தில் மோட்டார் படகு இயக்கப்படுவதால், எரிபொருள் கலந்து மீன்கள் இறப்பதாக மீனவர்கள் குற்றம் சாட்டியுள்ள நிலையில், அந்தப் பகுதியை மீனவர்களுடன் சென்று கோவை தெற்கு எம்எல்ஏ வானதி சீனிவாசன் ஆய்வு செய்தார்.

அப்போது கோவை பெரியகுளத்தில் பெரிய டீசல் படகுகளை இயக்குவதால் மீன்கள் இறப்பதை மீனவர்சங்க பிரதிநிதிகள் நேரில் விளக்கினர்.
மேலும், மீனவர் வாழ்வாதாரத்தை பாதுகாத்து சுற்றுலாவை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பெடல் படகுகளை மட்டுமே இயக்கலாம் என வானதி ஸ்ரீனிவாசன் கூறியுள்ளார்.

மேலும் படிக்க