• Download mobile app
15 Jul 2026, WednesdayEdition - 3808
FLASH NEWS
  • தமிழக சட்டப்பேரவையில் காலியிடங்கள் 6 ஆக உயர்வு
  • யூதர்களின் நாட்டை அழிக்க ஈரான் முயற்சி – இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு
  • “மக்களால் நிராகரிக்கப்பட்டவர் ஸ்டாலின்!” – செங்கோட்டையன்
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கள்ளச் சாராயத்துக்கு 6 பேர் பலி

January 3, 2017 தண்டோரா குழு

மேற்கு வங்க மாநிலம், பர்த்வான் மாவட்டத்தில் உள்ள கல்சி என்னும் கிராமத்தில், கள்ளச் சாராயம் குடித்து 6 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளனர்.

இது குறித்து காவல்துறை அதிகாரி செய்தியாளர்களிடம் திங்கள்கிழமை (ஜனவரி 2) கூறியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் பர்த்வான் மாவட்டத்தில் உள்ள ராம்கோபால்பூர் என்னும் கிராமத்தில் கள்ளச் சாராயம் குடித்து ஆபத்தான நிலையில் பர்த்வான் மருத்துவமனை மற்றும் புர்ஷா மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர்களில் 6 பேர் உயிரிழந்தனர். 3௦ பேர் உயிருக்குப் போராடி வருகின்றனர். அவர்களில் 18 பேருடைய நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளோம். விரைவில் சம்பந்தப்பட்ட நபர்களைக் கைது செய்வோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க