• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

75-வது சுதந்திர தினவிழா : அனைத்து வீடுகளிலும் தேசிய கொடி ஏற்றி கொண்டாடுவோம்

August 9, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் கூறியிருப்பதாவது:

75-வது சுதந்திரத்தின விழாவினை கொண்டாடும் வகையில் மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும், நிறுவனங்களிலும் தேசிய கொடியினை ஏற்றிட அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, கோவை மாவட்டத்திலுள்ள மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம், ஊராட்சிகளிலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சுதந்திர திருநாள் அமுதப் பெருவிழாவினை சிறப்பாக கொண்டாடுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மேலும், தேசிய கொடியினை வீடுகளில் ஏற்றிய பிறகு அதனை பாதுகாப்பாக பராமரிக்கப்பட வேண்டும். தேசிய கொடியினை புனித தன்மையை பேணும் வகையில் எந்தவித அலட்சியமும், அவமரியாதையும் இன்றி கையாளுதல் வேண்டும். தேசிய கொடிகளை திறந்த வெளியிலோ, குப்பை தொட்டியிலோ, வயல்வெளியிலோ எறியக் கூடாது.

எனவே, பொதுமக்கள் அனைவரும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ஒத்துழைப்பு நல்கி 75-வது சுதந்திர திருநாள் அமுத பெருவிழாவினை முன்னிட்டு கோவை மாவட்டத்திலுள்ள அனைத்து வீடுகளிலும் வரும் 13ம் தேதி முதல் 15ம் தேதி வரை தேசிய கொடி ஏற்றி சுதந்திர தினப் பெருவிழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

மேலும் படிக்க