• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டினால் வழக்கு – மாநகராட்சி கமிஷனர் எச்சரிக்கை

July 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சிக்கு உள்பட்ட பொது இடங்களில் விளம்பரம் எழுதுதல், சுவரொட்டிகள் ஒட்டுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டால், அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் எச்சரித்துள்ளார்.

இதுதொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

மாநகராட்சி எல்லைக்கு உள்பட்ட பொது இடங்கள், அரசுக் கட்டடங்கள், சுவர்கள், தெரு விளக்கு கம்பங்கள், சாலை மைய திட்டுகள், பாலங்கள் மற்றும் இயற்கை வளங்களில் விளம்பரங்கள் எழுதவோ, சுவரொட்டிகள் ஒட்டவோ கூடாது.

மீறினால் சம்பந்தப்பட்ட வர்த்தக நிறுவனம் அல்லது விளம்பர நிறுவனங்கள், தொழில் சங்கங்கள், அரசியல் அமைப்புகள், பொது நிகழ்ச்சி மற்றும் குடும்ப நிகழ்ச்சிக்காக சுவரொட்டி வைப்பவர்கள் ஆகியோருக்கு அபராதம் விதிப்பதுடன் குற்றவியல் வழக்குகள் தாக்கல் செய்யப்படும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க