• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

பஸ் நிலையங்கள், கடை வீதிகளில் பொதுமக்களுக்கு கொரோனா பரிசோதனை

July 22, 2022 தண்டோரா குழு

கோவை மாநகரின் முக்கிய கடை வீதிகள், பஸ் நிலையங்களில் பொது மக்களிடையே ரேண்டம் அடிப்படையில் கொரோனா பரிசோதனை செய்யப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே போகிறது. இதனை தடுக்க மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் தீவிர பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.

உக்கடம், டவுன்ஹால், கிராஸ்கட், காந்திபுரம், 100 அடி சாலை உள்ளிட்ட கடை வீதிகளில் மக்கள் கூடும் இடங்களில் மற்றும் பஸ் நிலையங்களில் கொரோனா பரிசோதனை செய்யும் பணியை கோவை மாநகராட்சி தீவிரப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,‘

மக்கள் கூடும் இடங்களில் அனைவரிடமும் கொரோனா பரிசோதனை மாதிரிகளை சேகரிக்காமல் பொதுவாக குறிப்பிட்ட சிலரிடம் ரேண்டம் அடிப்படையில் மாதிரிகள் சேகரிக்கப்படுகின்றன. இச்சோதனையில், தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டால் தொடர்புடையோரை கண்டறியும் வகையில் உரிய விவரங்களும் பதிவு செய்யப்படுகின்றன’’ என்றார்.

மேலும் படிக்க