• Download mobile app
05 Jun 2026, FridayEdition - 3768
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஸ்மார்ட் கார்டுகள் வழங்க வேண்டும் – மு.க ஸ்டாலின்

January 2, 2017 தண்டோரா குழு

குடும்ப அட்டைகளுக்குப் பதிலாக ஸ்மார்ட் கார்டுகளை வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக பொருளாளரும் ,எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஸ்டாலின் திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:

குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி வரை நீட்டிப்பதற்காக, குடும்ப அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி தொடங்கியுள்ளது.

ஏழை எளிய மக்களுக்கு அரிசி உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் வழங்கவும், முகவரிக்கான முக்கிய அடையாள ஆவணமாகவும் திகழும் குடும்ப அட்டை விஷயத்தில் தமிழக அரசு தொடர்ந்து மெத்தனமாக இருந்து வருவது கண்டனத்திற்குரியது.

இந்த அரசு ஆட்சிக்கு வந்தது முதல் தாள் ஒட்டும் பணியில் மட்டுமே அதிக கவனம் செலுத்தி, புதிய “ஸ்மார்ட் கார்டு’ வழங்குவதை தள்ளிப் போட்டுக் கொண்டே வருகிறது. இந்தத் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட ரூ. 318 கோடி நிதி என்ன ஆனது என்பதை, மக்கள் மன்றத்தில் தமிழக அரசு விளக்கமளிக்க வேண்டும். ஏற்கனவே அறிவித்தபடி “ஸ்மார்ட் கார்டு’ வழங்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க