• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை திருச்சி சாலை மேம்பாலத்தில் மீண்டும் விபத்து – இதுவரை 3 பேர் உயிரிழப்பு

July 14, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்டத்தில்  திருச்சி சாலை சுங்கம் பகுதியில்  மேம்பாலத்தை முதல்வர் முக.ஸ்டாலின் காணொளி வாயிலாக திறந்து வைத்தார்.

அம்மேம்பாலத்தில் மேம்பாலம் திறந்த அன்றைய தினமே ஒருவர் விபத்தில் உயிரிழந்தார். அதனையடுத்து சுங்கம் சந்திப்பு உக்கடம் வளைவில் ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து மேம்பாலத்தில் இருந்து கீழே விழுந்து சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதனை தொடர்ந்து விபத்துகளை குறைப்பதற்கு மேம்பாலத்தில் வேகத்தடைகள் அமைக்கப்பட்டது.

இருப்பினும் இன்று இரு சக்கர வாகனத்தில் வந்த ஆனந்த் குமார்(42) என்பவர் சிங்காநல்லூர் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து மேம்பால தடுப்பு சுவறில் மோதி தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில் விபத்து நடந்த இடத்தில் கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன், மற்றும் போக்குவரத்து புலனாய்வு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் படிக்க