• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை -சொர்ணூர் ரயில் மீண்டும் இயக்கம்

July 9, 2022 தண்டோரா குழு

கோவையில் இருந்து சொர்ணூர் வரை செல்லும் மெமு ரயில் மீண்டும் இயக்கப்படும் என்று ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து பாலக்காடு கோட்ட ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

ஜூலை 11ஆம் தேதி முதல் ஞாயிற்றுக்கிழமை தவிர கோவையில் இருந்து காலை 11.20 மணிக்கு கிளம்பும் மெமு ரயில் பிற்பகல் 2.30 மணிக்கு சொர்ணூரைச் சென்றடையும். இதேபோல், ஜூலை 11ம் தேதி முதல் (ஞாயிற்றுக்கிழமை தவிர) சொர்ணூரில் இருந்து மாலை 3.10 மணிக்கு புறப்படும் மெமு ரயில் மாலை 5.50 மணிக்கு கோவை நிலையத்தை வந்தடையும்.

இந்த ரயிலானது, போத்தனூர், மதுக்கரை, எட்டிமடை, வாளையார், கஞ்சிக்கோடு, பாலக்காடு, பர்லி, மாங்கரை, லக்கிடி, பலப்புரம், ஒட்டப்பாலம், மன்னனூர் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க