• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

உக்கடம் மீன் மார்கெட்டில் வாங்கிய மீனில் இராசயன வாசனை

July 2, 2022 தண்டோரா குழு

உக்கடம் மீன் மார்கெட்டில் வாங்கிய மீனில் இராசயன வாசனை- உணவு பாதுகாப்பு துறையில் புகார் பதிவு செய்தும் பதில் இல்லை என புகார்.

கோவை வடவள்ளி பகுதியை சேர்ந்தவர் சிவா. புகைபடக்கலைஞராக உள்ளார். இவர் உக்கடம் மீன் மார்க்கெட்டில் வாங்கிய மீனில் இருந்து இரசாயன வாசம் வீசுவதாக புகார் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தெரிவிக்கையில்,

இன்று காலை உக்கடம் லாரி பேட்டை பின்புறம் உள்ள மீன் மார்க்கெட்டில் மத்தி மீன் வாங்கியதாகவும் மீன் எடுக்கும் போதே மீன் உடைந்து வந்ததாகவும் இது குறித்து மீன் விற்பனையாளரிடம் கேட்டபோது மீன் பிடித்து கூடைக்குள் போடும் போது இவ்வாறு நிகழ கூடும் எனவும் மீன் நல்ல மீன்கள் என கூறியதாக தெரிவித்தார்.

பின்னர் வீட்டிற்கு சென்று மீனை சுத்தம் செய்யும் போது பிணவறையில் உபயோகிக்கப்படும் இரசாயன வாசம் வீசியதாகவும் சமைத்த பிறகு சமையலறை முழுவதும் இரசாயன வாசம் வீசியதாக தெரிவித்தார். இது குறித்து உணவு பாதுகாப்பு துறைக்கு வாட்ஸ்அப் மூலம் குறுஞ்செய்தி அனுப்பியும் எவ்வித பதிலும் அளிக்கப்படவில்லை எனவும் கூறினார்.

கொடுக்கின்றன பணத்திற்கு தரமான உணவு பொருட்களை விற்பன செய்ய வேண்டும் எனவும் கேட்டுகொண்டார்.

மேலும் படிக்க