• Download mobile app
15 Nov 2025, SaturdayEdition - 3566
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் காத்திருப்பு போராட்டம்

July 1, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு காது கேளாதோர் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது.

“அரசு அல்லது தனியார் வேலைவாய்ப்பில் 1% இன் படி வேலை வாய்ப்பு வழங்கிட வேண்டும், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு தொகுப்பு வீடு வழங்கிட வேண்டும், மாதாந்திர உதவித் தொகையை 3000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும், ஆவின் பாலகம் அமைத்துக் கொடுக்க வேண்டும், அனைத்து அரசு அலுவலகங்கள் கல்வி நிறுவனங்களில் சைகை மொழியை அமல்படுத்தி அரசாணை வெளியிட வேண்டும், கொக்கோகோலா(Cocacola) நிறுவனங்களில் ஒப்பந்த காதுகேளாத தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகங்களில் அனுபவம் வாய்ந்த சைகை மொழிபெயர்ப்பாளர்களை நியமனம் செய்ய வேண்டும்” உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி காத்திருப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது.

மேலும் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஓட்டுனர் உரிமம் வழங்க முகாம் எங்கே?, வாரிசு அடிப்படையில் காது கேளாத மாற்றுத்திறனாளிகளுக்கு பணி நியமனம் வழங்க தடுமாற்றம் ஏன்?, தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தில் தமிழ்நாடு காதுகேளாதோர் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எங்கே?, ஆகிய கேள்விகள் அடங்கிய பதாகைகள் ஏந்தியும் ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது. இதில் கோவை மாவட்டத்தை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்டோர் அவர்களது கோரிக்கை பதாகைகளை ஏந்தி விசில் ஊதி, கைகளை உயர்த்தி ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.

தங்களது கோரிக்கைகளை மாவட்ட ஆட்சியர் உடனடியாக நிறைவேற்ற தமிழக அரசுக்கு ஆவணம் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளனர்.

மேலும் படிக்க