• Download mobile app
28 Apr 2024, SundayEdition - 3000
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு

June 22, 2022 தண்டோரா குழு

கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலியான வாட்ஸ்அப் கணக்கு தொடங்கி மோசடியில் ஈடுபட முயன்ற அடையாளம் தெரியாத நபர்கள்.

கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் ஐஏஎஸ் பெயரில் போலியான வாட்ஸ் அப் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. போலி கணக்கு தொடங்கிய நபர்கள் அமேசான் கிஃப்ட் pay coupon மூலம் பணம் அனுப்ப குறுஞ்செய்தி அனுப்பியதாக தெரிகிறது.

இந்த போலி கணக்கு குறித்து மாவட்ட ஆட்சியர் சமீரனுக்கு தெரியவர தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து பதிவிட்டுள்ளார். தனது பெயரில் தொடங்கப்பட்டுள்ள போலி வாட்ஸ்அப் கணக்கின் screenshot உடன் பதிவிட்டுள்ள அவர், தனது பெயர் மற்றும் புகைப்படம் கொண்ட வாட்ஸ்அப் எண்ணில் இருந்து மெசேஜ் வந்தால் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கோவை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கணக்கு தொடங்கி அவர்கள் குறித்து சைபர் கிரைம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் படிக்க