• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையை சேர்ந்த 8 வயது சிறுமி தொடர்ந்து 8 மணி நேரம் சிலம்பம் சுற்றியபடி பரதநாட்டியம் ஆடி சாதனை

June 20, 2022 தண்டோரா குழு

கோவை சின்னவேடம்பட்டி சக்தி நகரைச் சேர்ந்த மீனாட்சி சுந்தரம் ,திவ்யா ஆகியோரின் மகள் சாதனா. மூன்றாம் வகுப்பு பயிலும் 8 வயதே நிரம்பிய சாதனா. காலை ஒன்பது மணிக்கு துவங்கி மாலை ஐந்து மணி வரை தொடர்ந்து தனது இரண்டு கைகளிலும் சிலம்பம் சுற்றிபடி பரதநாட்டியம் ஆடி அசத்தியுள்ளார்.

சின்னவேடம்பட்டி சி.எம்.எஸ்.கல்லூரி அரங்கில் நடைபெற்ற, இவரது, இந்த சாதனையை INDIA BOOK OF WORLD RECORDS அங்கீகரித்துள்ளது. தொடர்ந்து சிறுமி சாதனாவிற்கு, இந்தியன் புக் ஆப் வேர்ல்டு ரெக்கார்டு தீர்ப்பாளர் பிரகாஷ்ராஜ்,பதக்கம்,கேடயம் மற்றும் கோப்பையை வழங்கினார்.நிறுவனர் டாக்டர் சதாம் உசைன் வாழ்த்துக்களை தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் பரத குரு மகாலட்சுமி, சின்னவேடம்பட்டி முல்லை தற்காப்பு கலை மற்றும் விளையாட்டு கழகத்தின் மேலாளர் கார்த்திக், துணை பயிற்சியாளர் கலையரசி, மற்றும் சிலம்ப பயிற்சி மாணவர்கள், பெற்றோர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.தனது சிறு குழந்தை பருவத்திலேயே இந்த சாதனை செய்த சிறுமி சாதனா கூறுகையில்,ஐந்து வருடங்களாக நாட்டியத்தையும்,ஒன்றரை வருடங்களாக முல்லை தற்காப்பு மற்றும் விளையாட்டு கழகத்தில் சிலம்பத்தையும் கற்று வருவதாக கூறிய அவர்,இரண்டையும் இணைத்து இந்த சாதனை முயற்சியில் ஈடுபட்டதாக தெரிவித்தார்.

தொடர்ந்து அவர்,இந்த சாதனையை தந்தையார் தினமான இன்று தனது தந்தைக்கு சமர்ப்பிப்பதாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.. சிறுமி சாதனாவின் இந்த சாதனை முயற்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது குறிப்பிடதக்கது.

மேலும் படிக்க