• Download mobile app
06 May 2026, WednesdayEdition - 3738
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

ஈராக் சந்தையில் வெடிகுண்டு தாக்குதல் 21 பலி 40 பேர் காயம்

December 31, 2016 தண்டோரா குழு

ஈராக் நாட்டின் தலைநகரான பாக்தாதில் சனிக்கிழமை நடந்த இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 40 பேர் காயமடைந்தனர்.

இது குறித்து பாக்தாத் காவல் துறை அதிகாரி ஒருவர் நிருபர்களிடம் கூறியதாவது:

மத்திய பாக்தாதில் மக்கள் கூட்டம் அதிகம் இருந்த ஒரு சந்தையில் திடீரென்று இரண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் பல கடைகள் நொறுங்கி விழுந்தன. பொருள்கள் வாங்க வந்திருந்த மக்கள் தூக்கி வீசப்பட்டனர். இச்சம்பவத்தில் 21 பேர் உயிரிழந்தனர். 40 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் உடனே அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். மருத்துவர்கள் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இச்சம்பத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. எனினும் இச்சம்பவத்துக்கு மனித வெடிகுண்டு தாக்குதல் காரணமாக இருக்கலாம் என்று தகவல் கூறுகிறது. இந்தத் தகவல் குறித்தும் இச்சம்பவத்தைக் குறித்தும் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்க