• Download mobile app
30 Apr 2024, TuesdayEdition - 3002
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

வரும் 14ம் தேதி முதல் கோவை to ஷீரடிக்கு முதல் முறையாக ரயில் பயணம் ! – இன்று பூஜை !

June 11, 2022 தண்டோரா குழு

இந்திய ரயில்வே துறை அறிவித்துள்ள பாரத் கௌரவ் திட்டத்தின் கீழ் முதன் முறையாக தனியார் பங்களிப்புடன் கோயம்புத்தூரில் இருந்து ஷீரடிக்கு ஆன்மீக சுற்றுலாப் பயண மேற்கொள்ள ரயில் சேவை தொடங்கப்படவுள்ளது.இரண்டு அடுக்கு ஏசி மற்றும் உயர்தர வசதிகளைக் கொண்ட இந்த வாராந்திர ரயில் பயணம், செவ்வாய்க்கிழமை காலை தொடங்கி வெள்ளிக்கிழமை மாலை முடிவடையும்.

கோயம்புத்தூரில் இருந்து ஈரோடு,சேலம், பெங்களூர், மந்த்ராலாயம் வழியாக ஷீரடிக்கு செல்லும் இந்த பயணத்தில்,ஒரே கட்டணத்தில், 4 நாட்களுக்கான உணவு மற்றும் ரயில் பயணத்திற்கு தேவையான படுக்கை விரிப்புகள், தலையணை,போர்வை,கிருமி நாசினி உள்ளிட்ட தினசரி பயன்பாட்டு பொருட்கள், ஷீரடியில் போக்குவரத்து வசதி,வியாழக்கிழமை சாய் தரிசனம்,தரிசனத் திற்கான கட்டணம் என அனைத்தும் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வரும் 14ம் தேதி கோவையில் இருந்து ஷீரடிக்கு முதல் முறையாக தனியார்(MNC) பங்களிப்புடன் ரயில் பயணம் துவங்க உள்ளது. இதற்காக பூஜை இன்று நடைபெற்றது.இதில் பல்வேறு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க