கோவை அரசு மருத்துவமனையில் முதல் முறையாக நோயாளி ஒருவருக்கு 2 பேஸ்மேக்கர் கருவி பொருத்தி இருதயப் பிரிவு மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இதுகுறித்து அரசு மருத்துவமனை டீன் நிர்மலா கூறியதாவது:
கோவையை சேர்ந்த ஏ.முருகானந்தம் (60) கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இருதயம் பாதிப்பு தொடர்பாக மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். அப்போது அவரின் இருதயத் துடிப்பு 40 வரை மட்டுமே இருந்துள்ளது.இதனைத் தொடர்ந்து முதியவருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்த முடிவு செய்யப்பட்டது.பெரும்பாலும் இருதயத்தின் ஒரு அறையில் மட்டுமே பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்படும்.
ஆனால், முதியவருக்கு இருதய துடிப்பு மிகவும் குறைவாக இருந்ததால் இரண்டு பேஸ்மேக்கர் பொருத்த முடிவு செய்யப்பட்டது.அதன்படி வலது வெண்ட்ரிக்கள் மற்றும் வலது ஏட்ரியம் ஆகிய இரு அறைகளிலும் பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் தற்போது இருதயத் துடிப்பு சீராகியுள்ளது. நோயாளியும் குணமடைந்து வீட்டிற்கு திரும்பும் நிலையில் உள்ளார்.
இது போன்ற இருதய துடிப்பு மிகவும் குறைவது முதிர்வு, ரத்த அழுத்தம், ரத்தக்குழாயில் அடைப்பு ஆகிய காரணங்களால் ஏற்படுகிறது. பேஸ்மேக்கர் கருவி பொருத்துவதால் மீண்டும் இருதயத் துடிப்பு சீராக்கப்படும். இந்த அறுவை சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனைகளில் ரூ.5 லட்சம் வரை செலவாகும்.அரசு மருத்துவமனையில் முதல்வர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் இலவசமாக செய்யப்பட்டுள்ளது. எங்கள் மருத்துவமனையில் இதுவரை 15 பேருக்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
கோவை மாவட்டத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் – 45 மனுக்கள் மீது சுமூகமான தீர்வு
கோவையில் அன்னையர் நினைவாக, தாய்மையை போற்றும் விதமாக தாய் – சேய் சிலை திறப்பு
தமிழ்நாட்டில் தனது மூன்று சக்கர மின்சார வாகனமான டிவிஎஸ் கிங் இவி மேக்ஸ் – டிவிஎஸ் மோட்டார் அறிமுகம்
கோவையில் தனிஷ்க் ஜுவல்லரியின் பிரம்மாண்ட காதணி கண்காட்சி திருவிழா துவக்கம்
கோவையில் ஜூன் 10ல் 1008 திருவிளக்கு திருவிழா – 51 மகளிருக்கு “மகாசக்தி” விருது
ஈஷா மண் காப்போம் இயக்கத்தின் தன்னார்வலருக்கு ஐநா-வில் பொறுப்பு