• Download mobile app
24 May 2025, SaturdayEdition - 3391
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

டில்ட் முறையில் வடிகால்களை தூர்வார கோரிக்கை

April 23, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சி மேயர் கல்பனாவிடம் 26வது வார்டு கவுன்சிலர் சித்ரா வெள்ளியங்கிரி மனு ஒன்று அளித்துள்ளார்.

அதில் கூறியிருப்பதாவது:

கோவை மாநகராட்சி 26வது வார்டுக்குட்பட்ட அனைத்து மழைநீர் வடிகால் பாதைகளும் மண்
நிறைந்துள்ளது. இதனால் சாக்கடை தண்ணீர் வீடுகளுக்குள் புகும் அபாயம் உள்ளது. சில இடங்களில் புழு, பூச்சிகள் உருவாக்கி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இதனால் நோய் ஏற்படும் அபாயம் உள்ளது.

கடந்த காலத்தில் கட்டப்பட்ட அனைத்து மழைநீர் வடிகால்களும் வாட்டம் இல்லாத காரணத்தால் ஆங்காங்கே தண்ணீர், மண், குப்பைகள் தேங்கி கொசு உற்பத்தி அதிகமாகி நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே டில்ட் என்கிற சாய்வு முறையில் அனைத்து வடிகால்களையும் அதற்கான பணியாளர்களை கொண்டு தூர்வாரி
தரவேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க