• Download mobile app
03 Jun 2026, WednesdayEdition - 3766
FLASH NEWS
  • எங்களை நீக்குவதற்கு இபிஎஸ்க்கு அதிகாரம் இல்லை.. – சி. வி.சண்முகம்
  • எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட MLA-க்கள் பதவி பறிப்பு
  • ”நீட் தேர்வை முழுமையாக ரத்து செய்ய வேண்டும்”- முதல்வர் விஜய்
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் ஆதரவற்ற குழந்தைகளை பீஸ்ட் படம் பார்க்க வைத்த இளைஞர்கள்

April 20, 2022 தண்டோரா குழு

கோவையை சேர்ந்த வணக்கம் தோழர்களே அமைப்பின் இளைஞர்கள் கொஞ்சம் வித்தியாசமாகச் சிந்தித்து,உணர்வுப்பூர்வமான சமுதாயப் பணியை செய்து வருகின்றனர். கோவை போத்தனூர் பகுதியில் உள்ள பேமிலி ஃபார் சில்ட்ரன் எனும் ஆதரவற்றோர் இல்லத்தில் முடங்கிக் கிடந்த குழந்தைகளை,போத்தனூரில் உள்ள அரசன் மல்டிப்ளக்ஸ் தியேட்டருக்கு அழைத்துச் சென்று,அங்கே விஜய் நடிப்பில் தற்போது ஓடிக்கொண்டிருக்கும் பீஸ்ட் படத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதுகுறித்து,வணக்கம் தோழர்களே அமைப்பின் நிறுவன தலைவர் நவீன் ரோஷன் கூறுகையில்,

நானும் எனது நண்பர்கள் இந்த அமைப்பின் வாயிலாக சேர்ந்து, சாதாரணமாக சில உதவிகளை பிறருக்குச் செய்யத் துவங்கியதாகவும் தற்போது, வணக்கம் தோழர்களே அமைப்பின் வாயிலாக, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகளுக்கு நலத்திட்ட உதவிகள் உள்ளிட்ட சமூக நலப்பணிகளை செய்து வருவதாக கூறிய அவர்,அந்த வகையில்,ஆதரவற்ற குழந்தைகளை வெளியே அழைத்துச் செல்ல முடிவு செய்து அந்தக் குழந்தைகளிடம், அவர்களின் ஆசையைக் கேட்டதில்,. எல்லோரும் விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி உள்ள பீஸ்ட் திரைப்படத்தை பார்க்க விரும்பியதால், எஸ்.என்.எஸ்.கல்வி குழுமங்களுடன் இணைந்து இவ்வாறு அழைத்து வந்ததாக தெரிவித்தார்.

குறிப்பாக, பொதுவாக திரைப்படம் வெளியாகும்போது 100 அடி உயரத்திற்கு கட்டவுட் வைத்து கொண்டாடுவதை, விட இம்மாதிரி வெளியே செல்ல வாய்ப்பு இல்லாமல், திரையரங்கில் திரைப்படங்களை பார்க்க வாய்ப்பு இல்லாத மாற்றுத்திறனாளிகளை படத்திற்கு அழைத்து வருவதை நடிகர் விஜய் விரும்புவார். இதேபோல் மீண்டும் அடுத்தப் படத்திற்கு அவர்களை அழைத்துச் செல்வோம் எனவும் தெரிவித்தார்.இதையடுத்து மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு மதிய உணவும் வழங்க உள்ளதாக தெரிவித்தார்.

மேலும் படிக்க