• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கள்ளக்காதலனின் மனைவி – மகள் குறித்து பேஸ்புக்கில் அவதூறு அழகு கலை பெண் நிபுணர் சிறையில் அடைப்பு

April 20, 2022 தண்டோரா குழு

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்தவர் உமா ரஞ்சனி (28). அழகு கலை நிபுணர்.இவருக்கும் கோவையை சேர்ந்த 40 வயது தனியார் நிறுவன ஊழியருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

கள்ளக்காதலர்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து உற்சாகமாக வலம் வந்தனர்.இந்த தகவல் தனியார் நிறுவன ஊழியரின் மனைவிக்கு தெரியவந்தது.இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.
பின்னர் இதுகுறித்து அவரது மனைவி குடும்பத்தினரிடம் கூறினார்.இதனால் அதிர்ச்சி அடைந்த இருதரப்பு குடும்பத்தினரும் கள்ளக்காதலில் ஈடுபட்ட தனியார் நிறுவன ஊழியரை அழைத்து கண்டித்து அறிவுரை கூறினர்.இதனால் தனியார் நிறுவன ஊழியர் கள்ளக்காதலை கைவிட்டார்.

இதையடுத்து அவர் கள்ளக்காதலியான உமாரஞ்சினியை சந்திப்பதையும் தவிர்த்து வந்தார்.ஆனால் உமா ரஞ்சனி கள்ளக்காதலை கைவிட மறுத்து தொடர்ந்து அவரிடம் பேச முயறசி செய்து வந்ததாக தெரிகிறது. அப்போது தனியார் நிறுவன ஊழியர் அவரை கண்டு கொள்ளவில்லை.இதை பொறுத்துக்கொள்ள முடியாத உமாரஞ்சனி,கள்ளகாதலனை பழி வாங்குவதற்காக அவரது மனைவி, 15 வயது மகளின் புகைப்படங்களை தனது பேஸ்புக் பக்கத்தில் ஆபாச வார்த்தைகளால் குறிப்பிட்டு பதிவிட்டார்.

இதனை கண்டு தனியார் நிறுவன ஊழியரின் மனைவி அதிர்ச்சி அடைந்தார்.பின்னர் இதுகுறித்து அவர் கோவை மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.புகாரின் பேரில் போலீசார் தகவல் தொழில்நுட்ப சட்டம் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து உமா ரஞ்சனியை கைது செய்தனர். அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் படிக்க