• Download mobile app
01 Apr 2026, WednesdayEdition - 3703
FLASH NEWS
  • “மாணவர்கள் நடத்திய மொழிப்போரில் ஸ்டிக்கர் ஒட்டிக்கொண்டது திமுக”- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்
  • பிரவீன் சக்ரவர்த்தியின் கருத்து காங்கிரஸ் தலைமையின் கருத்து கிடையாது – கார்த்தி சிதம்பரம்
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

நகரில் சேதம் அடைந்த சாலைகள் தொடர்பாக மாநகராட்சி வாட்ஸ் ஆப் எண்ணுக்கு 1,200 புகார்

April 19, 2022 தண்டோரா குழு

கோவை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு உட்பட்ட பகுதிகளில் குடிநீர் திட்ட பணிகள், பாதாள சாக்கடை பணிகள் போன்றவைகளுக்காக பல்வேறு இடங்களில் மாநகராட்சி சாலைகள் தோண்டப்பட்டு சேதமடைந்துள்ளன.

இதனிடையே கோவை மாநகராட்சி பகுதிகளில் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து அதனை 81476 84653 என்ற மாநகராட்சியின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பலாம் என மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது. இதனை அடுத்து பொதுமக்கள் சேதமடைந்த சாலைகளை புகைப்படம் எடுத்து மாநகராட்சிக்கு அனுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் இதுவரை சுமார் 1200க்கும் மேற்பட்ட புகைப்படங்கள் வந்துள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தகவல் தெரிவிக்கின்றனர்.

இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில்,

‘‘மாநகராட்சியில் சாலை சீரமைக்க ஏற்கனவே ரூ.200 கோடி நிதி தமிழக அரசால் ஒதுக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் சாலைகளில் பேட்ஜ் ஒர்க் செய்ய முதல்கட்டமாக ரூ.10 லட்சம் நிதி மாநகராட்சி சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனுப்பும் சாலைகள் தொடர்பான புகார்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்

மேலும் படிக்க