• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கராத்தே போட்டியில் சர்வதேச அளவில் மாணவர் சாதனை: முதன்மை கல்வி அலுவலர் பாராட்டு

April 13, 2022 தண்டோரா குழு

கோவை சூலூர் அரசூரில் உள்ள ஸ்ரீ விவேகானந்த பப்ளிக் பள்ளியில் 6ம் வகுப்பு மாணவன் ஷஷான்ங்க் அபிலாஷ். இவர் அட்வென்ச்சர் அகாடமி ஆஃப் மார்ஷல் ஆர்ட்ஸ் கராத்தே அகாடமியில் கடந்த 2018 முதல் பயிற்சி பெற்று வருகிறார்.பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு தங்கம்,வெள்ளி மற்றும் வெண்கல பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் 2019ம் ஆண்டில் நடைபெற்ற மாநில, மாவட்ட அளவிலான கராத்தே போட்டிகளில் சப் ஜூனியர் கட்டா பிரிவில் தங்கப்பதக்கம் வென்று அதன் மூலம் தேசிய அளவிலான கராத்தே போட்டியில் தமிழ்நாடு சார்பில் கலந்து கொண்டு வெண்கல பதக்கம் வென்றார். மேலும் இவர் கட்டா, டீம் கட்டா,குமித்தே போன்ற பிரிவுகளில் ஒலிம்பிக்கில் தடம் பதிப்பதே தன் இலக்காக கொண்டு பயிற்சி பெற்று வருகிறார். இவரின் தொடர் சாதனைகளை பாராட்டி அகாடமியின் மூலம் சிறந்த மாணவருக்கான விருது வழங்கப்பட்டது.

இதனை கோயம்புத்தூர் முதன்மை கல்வி அலுவலர் கீதா வழங்கி பாராட்டினார். மேலும், இவரின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருக்கும் பள்ளி நிறுவனர் பத்மினி ராமமூர்த்தி, பள்ளி முதல்வர் மாலதி கோபிநாத், தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் கராத்தே சங்க தலைவர் சென்சாய் எஸ்.சாய்புரூஸ்,தமிழ்நாடு ஸ்போர்ட்ஸ் காராத்தே சங்க ஆர்.சி தலைவர் சென்சாய் அறிவழகன் மற்றும் பயிற்சியாளர் நாசர்தீன் ஆகியோர் பாராட்டுக்களையும், சாதனைகள் படைக்க வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

மேலும் படிக்க