• Download mobile app
23 May 2025, FridayEdition - 3390
FLASH NEWS
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு
  • தமிழ்நாட்டில் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்க்கு மேல் வெயில் பதிவு!
  • “சந்திரபாபு நாயுடு கூறும் அனைத்துமே கட்டுக்கதைகள்” – ஜெகன் மோகன் ரெட்டி
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்
  • பீகார் முன்னாள் துணை முதலமைச்சர் சுஷில் குமார் மோடி காலமானார்!
  • தமிழ்நாட்டில் +1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியானது.. 91.17% பேர் தேர்ச்சி..!
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி
  • அமைச்சர் உதயநிதி துணை முதல்வராவதற்கு காத்திருக்கிறேன் – சபாநாயகர் அப்பாவு

கோவை விழா 14 வது பதிப்பு கோலாகல துவக்கம் – ஆட்சியர், மாநகராட்சி கமிஷனர் துவக்கி வைப்பு

April 9, 2022 தண்டோரா குழு

கோவை விழாவின் 14வது பதிப்பை, கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.

கோவை விழா என்பது கோவை நகரத்தின் உணர்வை கொண்டாட கடந்த 13 ஆண்டுகளாக பல அமைப்புகள் மற்றும் கோவை மக்களால் நடத்தப்படும் ஒரு முயற்சியாகும். கோவை மக்களின் கலாச்சாரம், பாரம்பரியங்கள் மற்றும் சமூக உணர்வின் வண்ணமயமான கொண்டாட்டத்தை கோவை விழா குறிக்கிறது.

கோவை விழாவின் முதல் நாள் நிகழ்வாக ‘ஆர்ட் ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி கோவை ரேஸ்கோர்ஸ் வாக்கர்ஸ் பாதையில் துவங்கப்பட்டது. இதனை மாவட்ட ஆட்சியர் சமீரன் மற்றும் மாநகராட்சி கமிஷனர் ராஜகோபால் சுன்கரா ஆகியோர் துவக்கி வைத்தனர்.ஆர்ட் ஸ்ட்ரீட் என்பது கோவை விழாவின் முக்கிய நிகழ்வாகும். இதில் கலைஞர்கள் தங்கள் கலைப் படைப்புகளை காட்சிப்படுத்தினார்கள். 75 கலைஞர்கள் மற்றும் 14 பட்டறைகளுடன், ரேஸ் கோர்ஸ் வாக்கர்ஸ் பாதை மிகவும் கலைநயமிக்கதாக இருந்தது.

மேலும் கோவை விழா லோகோவை 14,000 கைரேகைகள் மூலம் வரைந்து உலக சாதனை முயற்சிக்கும் தன்னார்வலர் முயற்சித்தனர்.
இந்நிகழ்ச்சியில் கோவை விழா ஒருங்கிணைப்பாளர்கள் ஸ்ரீ குமரவேலு, அஷ்வின் மனோகர், நிஷித் ஷா, அபிஷேக் கல்ரோ, அவந்திகா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்க