• Download mobile app
13 Feb 2026, FridayEdition - 3656
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவை வாலாங்குளம் பகுதியில் குப்பைகளை அகற்றும் பணிகளில் ஈடுபட்ட என்சிசி மாணவர்கள்

April 1, 2022 தண்டோரா குழு

கோவை உக்கடம், சுங்கம் வாலாங்குளம் பகுதியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ், என்சிசி மாணவர்கள்,அந்தபகுதியில் உள்ள குப்பைகளை அகற்றும் பணிகளில் இன்று ஈடுபட்டனர்.

கோவை உக்கடம்,சுங்கம் வாலாங்குளம் பகுதியில் சாலையோரங்களில் போடப்பட்டுள்ள குப்பைகளை அகற்றவும்,பொது இடங்களை தூய்மையாக வைத்திருப்பதன் அவசியத்தை வலியுறுத்தியும் மத்திய அரசின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக, என்சிசி மாணவர்களுடன், இராணுவ வீரர்களும் இணைந்து சுத்தம் செய்தனர்.

நடைபெற்ற இந்த பணிகளை, 4 தமிழ்நாடு பெட்டாலியன் என்சிசி கர்னல் J P S சவான் மற்றும்,மேஜர் ஆபிசர், M D கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினார்.சுமார் 200 க்கும் மேற்பட்ட மாணவர்கள், உக்கடம் வாலாங்குளம், சுங்கம் பகுதியில் குப்பைகளை அகற்றுதல், பிளாஸ்டிக் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி மூன்று குழுக்களாகப் பிரிந்து,பொதுமக்களிடையே இந்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க