• Download mobile app
14 Nov 2025, FridayEdition - 3565
FLASH NEWS
  • ராகுல்காந்தியின் போராட்டத்திற்கு தோள் நிற்போம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
  • “ஜெயலலிதா அவர்களே என் ரோல் மாடல்” -பிரேமலதா விஜயகாந்த் பேட்டி
  • ராகுல் காந்தி கைது – தவெக தலைவர் விஜய் கண்டனம்
  • செத்து சாம்பல் ஆனாலும் தனித்துதான் போட்டி – சீமான்
  • பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டலுக்கு அஞ்சமாட்டோம் – இந்தியா
  • மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு: பட்டதாரிகள் அக்.16 வரை விண்ணப்பிக்கலாம்

கோவையில் 400 வருடங்கள் பழமையான கருப்புராயர் கோவிலின் கும்பாபிஷேக விழா

March 28, 2022 தண்டோரா குழு

கோவையில் 400 வருடங்கள் பழமையான கருப்புராயர் கோவிலின் கும்பாபிஷேக விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.

கோவை மாவட்டம் சூலூர் பகுதியில் உள்ள சின்னபுத்தூர் நெட்டையங்காட்டு தோட்டத்தில் 400ஆண்டுகள் பழைமை வாய்ந்த ஸ்ரீ கருப்பராயர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது.

தொடர்ந்து கோவிலின் வளாகத்தில் மங்கள இசை முழங்க இரண்டாம் கால யாக பூஜை,விக்னேஷ்வரா பூஜை,புண்யாகம் பிரம்பசுத்தி,பிம்பரக்ஷய பந்தனம்,நாடி சாந்தனம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து யாகசாலை கலசங்கள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ கருப்பராயன் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள ஸ்ரீ விநாயகர்,ஸ்ரீ கருப்பராயர் ஸ்ரீ கன்னிமார்,ஸ்ரீ அக்காண்டியம்மன் ஆகிய தெய்வங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேக விழா விமரிசையாக நடைபெற்றது.

நன்னீராட்டு பெருவிழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மேலும் படிக்க