• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு கோலி மற்றும் மீராபாய் சானுவின் பெயர் பரிந்துரை!!

September 17, 2018 தண்டோரா குழு

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி,பளுதூக்கும் வீராங்கனை மீராபாய் சானு இருவருக்கும் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்க மத்திய அரசுக்கு விளையாட்டுத்துறை பரிந்துரை செய்துள்ளது.

இந்திய அரசால் விளையாட்டு வீரர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதாக கருதப்படுவது ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது.கடந்த 1991ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வரும் இவ்விருதை இதுவரையில் 34 பேர் மட்டுமே பெற்றுள்ளனர்.இந்நிலையில்,இந்த ஆண்டுக்கான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு இந்திய அணியின் கேப்டன் விராத் கோலி மற்றும் பளு தூக்கும் வீராங்கனை மீராபாய் சானு ஆகிய இருவரின் பெயர்களை விளையாட்டுத் துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.மேலும்,இந்திய கிரிக்கெட் அணியில் இதுவரை சச்சின் டெண்டுல்கர் மற்றும் எம்.எஸ்.தோனி இருவர் மட்டுமே இந்த விருதைப் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்க