• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் தங்கம் வென்றார் இந்தியாவின் ஹிரிடே ஹஸாரிகா

September 7, 2018 தண்டோரா குழு

சர்வதேச துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் ஜூனியர் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் இந்தியாவின் ஹிரிடே ஹஸாரிகா தங்கம் வென்றார்.

தென்கொரியாவின் சாங்வான் நகரில் உலக துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது.இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் (ஜூனியர்) ஹிரிடே ஹசாரிகா,ஈரான் வீரர் அமிர் முகமது இருவரும் 250.1 புள்ளிகள் பெற்று முதலிடத்தைப் பிடித்தனர்.இதற்காக, அவர்களுக்கிடையே ஹூட்ஆப் வாய்ப்பு வழங்கப்பட்டது.இந்த வாய்ப்பில் ஹசாரிகா 10.3 புள்ளிகளும்,அமிர் முகமது 10.2 புள்ளிகளும் பெற்றனர்.இதனையடுத்து 0.1 புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை ஹசாரிகா வென்றார்.அமிர் முகமதுவுக்கு வெள்ளிப் பதக்கமும்,228.6 புள்ளிகள் பெற்ற ரஷ்ய வீரர் கிரிகோரி வெண்கலம் வென்றார்.

மேலும் படிக்க