November 8, 2017
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி-20 கிரிக்கெட் தொடரை இந்திய அணி, 2-1 என கைப்பற்றி அசத்தியது.
இந்தியா வந்துள்ள நியூசிலாந்து அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் இரண்டு போட்டியின் முடிவில், இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று சமநிலையில் இருந்தது.
இரு அணிகள் மோதிய மூன்றாவது டி-20 போட்டி கேரளாவின் திருவனந்தபுரத்தில் நடந்தது. இந்நிலையில் மழை குறுக்கிட்டதால், ’டாஸ்’ போடுவதில் தாமதம் ஏற்பட்டது. மழை நின்ற பின் போட்டி 8 ஓவர்களாக குறைக்கப்பட்டது.
இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார். இந்திய அணியில் சிராஜ், அக்ஷர் படேல் ஆகியோருக்கு பதில் மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். நியூசிலாந்து அணியின் அனுபவ வீரர் சவுத்தி அணிக்கு திரும்பினார்.