• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ்: அரையிறுதியில் பயஸ் இணை

November 11, 2017 tamilsamayam.com

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆண்கள் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா இணை அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.

பயஸ் – பூரவ்:

ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடர் அமெரிக்காவின் நாக்ஸ்வில் நகரில் நடைபெறுகிறது. இத்தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் – பூரவ் ராஜா இணை பிரிட்டனின் மார்கஸ் வில்லிஸ் – லியாம் பிராடே இணையை எதிர்கொண்டது.

இதில் முதல் இரண்டு செட்களையும் 7-5, 6-0 என பயஸ் இணை கைப்பற்றியது. இதன்மூலம் 7-5, 6-0 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில் இந்த இணை தென்னாப்பிரிக்காவின் ருவான் ரொயிலொஃப்ஸ் – பிரட்டனின் ஜோ சலிஸ்பரியை எதிர்கொள்ளும்.

நெடுஞ்செழியன் – கிரிஸ்டோபெர்:

இதே போல, ஜப்பானில் நடைபெறும் ஏ.டி.பி. சேலஞ்சர் டென்னிஸ் தொடரின் ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஜீவன் நெடுஞ்செழியன் – இந்தோனேசியாவின் கிரிஸ்டோபெர் ரங்கட் இணை இறுதிக்குப் போட்டிக்குள் நுழைந்தது.

இந்த இணை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் போல்ட் – பிராட்லி மவுஸ்லே இணையை 6-7, 6-4, 10-7 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது. இறுதிப்போட்டியில் ஜப்பானின் பென்
மெக்லச்லென் – யசுடாகா யுசியாமா இணைக்கு எதிராக களமிறங்க உள்ளது.

மேலும் படிக்க