• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

இந்தியா வெற்றியே காணாத போர்ட் எலிசெபத் – சரித்திரம் படைக்குமா?

February 14, 2018 tamilsamayam.com

தென் ஆப்ரிக்காவில் உள்ள போர்ட் எலிசெபத் மைதானத்தில் இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்ற மோசமான வரலாறு உள்ளது.

தென் ஆப்ரிக்கா சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 6 ஒருநாள், 3 டி20 போட்டிகளில் விளையாடி வருகின்றது. டெஸ்ட் தொடரை 2-1 என இழந்தாலும், 4 ஒருநாள் போட்டி முடிவில் 3-1 என வென்று இந்தியா முன்னிலை வகிக்கின்றது.

சரித்திரம் படைக்குமா இந்தியா :

இதுவரை போட்டி நடக்கும் தென் ஆப்ரிக்காவின் போர்ட் எலிசெபத்தில் உள்ள புனித ஜார்ஜ் பார்க் மைதானத்தில் இந்தியா விளையாடிய ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை. இந்த மைதானத்தில் இந்தியா விளையாடியுள்ள 5 ஒருநாள் போட்டிகள் அனைத்திலும் தோல்வியை சந்தித்துள்ளது.

2 டெஸ்ட் போட்டியில் ஒரு தோல்வி, ஒரு போட்டி டிரா ஆகியுள்ளது. அதே சமயம் தென் ஆப்ரிக்கா அணி இந்த மைதானத்தில் விளையாடியுள்ள 62 சர்வதேச போட்டிகளில் 23 போட்டிகளில் மட்டும் தோல்வியடைந்து 39 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

இன்றைய போட்டியில் இந்தியா வென்று தொடரை வெல்வதோடு, இந்த மைதானத்தில் வென்று, தோல்வி சாரித்திரத்தை மாற்றும் என எதிர்பார்க்கப் படுகின்றது.

மேலும் படிக்க