• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

போர்க்களமானது நிலக்கல்: ஐயப்ப பக்தர்களின் போராட்டத்தில் போலீசார் தடியடி

October 17, 2018 தண்டோரா குழு

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற தீர்ப்புக்கு எதிராக கேரள மாநிலம் நிலக்கலில் போராட்டம் நடத்தி வரும் போராட்டக்காரர்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர்.

கேரள மாநிலம் சபரிமலையில் உலகப் புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் வழிபட அனுமதித்து கடந்த மாதம் 28–ந் தேதி உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பு வழங்கியது.இந்த தீர்ப்புக்கு ஆதரவும் எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.குறிப்பாக கேரளாவில் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன தீர்ப்பை மறு ஆய்வு செய்யக்கோரி கேரள அரசு மனுதாக்கல் செய்ய வேண்டும் என்று கோரியும் போராட்டங்கள் வலுத்துள்ளன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில்,ஐப்பசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று(புதன்கிழமை)மாலை திறக்கப்பட்டு 22–ந்தேதி வரை தொடர்ந்து 5 நாட்கள் நடை திறந்து இருக்கும்.இதனால் பெண்களின் வருகை அதிக அளவில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இதையடுத்து,இன்று மாலை 5:00 மணிக்கு நடைதிறக்க இருப்பதால் இதில் கலந்துகொள்ள வரும் பெண் பக்தர்களுக்கு எந்த தீங்கும் நடந்துவிடக் கூடாது என்பதற்காக கேரள காவல்துறை 1500 போலீஸார்களை பாதுகாப்பிற்காக சபரிமலையில் குவித்துள்ளது.

இதையடுத்து,சபரிமலை பக்தர்கள் செல்லும் பிரதான வழியான நிலக்கல்லில்,நேற்று கூடிய ஐயப்ப பக்தர்கள், அங்கு வரும் வாகனங்களை சோதனையிட்டு 10 முதல் 50 வயது வரையிலான பெண்கள் வந்தால் அவர்களை தடுத்தி நிறுத்தி வருகின்றனர்.இதற்கிடையில்,சபரிமலையில் போராட்டக்காரர்களின் எதிர்ப்பை மீறி பம்பை வரை செல்ல முயன்ற 2 பெண் பக்தர்கள் தடுத்து,நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டனர்.அதைபோல் பம்பை அருகே செய்தி சேகரிக்க சென்ற 5 பெண் பத்திரிககையாளர்களை தாக்க முயற்சி நடந்தது.அவர்கள் வந்த வாகனங்கள் போராட்டக்காரர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இதனையடுத்து போராட்டக்காரர்களை கலைக்க போலீசார் தடியடி நடத்தியுள்ளனர்.ஆனால்,போராட்டத்தில் தடியடி நடத்திய போலீசார் மீது போராட்டக்காரர்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தியதால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் படிக்க