• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

ரஜினி ஹீரோவா அல்லது ஜீரோவா என்று மக்கள் முடிவு செய்வார்கள் – ஜெயக்குமார்

November 13, 2018 தண்டோரா குழு

நடிகர் ரஜினிகாந்த் ஹீரோவா அல்லது ஜீரோவா என்று மக்கள் முடிவு செய்வார்கள் என அமைச்சர் ஜெயக்குமார் கூறியுள்ளார்.சென்னை கலைவாணர் அரங்க வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,

7 பேர் விடுதலை குறித்த கேள்விக்கு ரஜினிகாந்த் அளித்த பதில் நெருஞ்சி முள் போன்றது.7 பேரை விடுதலை செய்ய வேண்டும் என நேற்றே ரஜினி கூறியிருக்க வேண்டும்.தற்போது காலந்தாழ்த்தி பதிலளித்துள்ளார்.அவர் சினிமாவில் வேண்டுமென்றால் பெரிய ஹீரோவாக இருக்கலாம்.ஆனால்,அரசியலில் அவர் ஹீரோவா ஜீரோவா என்பதை மக்கள் இதிலிருந்து முடிவெடுத்துக்கொள்வார்கள்.

எங்களைப் பொறுத்தவரை பா.ஜ.க மத்தியில் ஆட்சி நடத்துகிறது.அண்ணா கூறுவதுபோல மத்தியில் கூட்டாச்சி,மாநிலத்தில் சுயாட்சி.எனவே,எங்கள் சுயாட்சியை நாங்கள் எப்போதும் விட்டுக் கொடுக்க மாட்டோம்.அந்த அடிப்படையில் தான் மாநிலத்துக்குத் தேவையான அனைத்து நிதிகளையும் பெரும் நோக்கில் தமிழக முதல்வர் பிரதமரை சந்திக்கிறார் எனக் கூறினார்.

மேலும் படிக்க