• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

காவிரி விவகாரம்: அதிமுக உள்பட அனைத்து கட்சிகளுக்கு ஸ்டாலின் அழைப்பு

October 22, 2016 தண்டோரா குழு

தமிழகத்தில் காவிரி விவகாரம் குறித்து வரும் 25ம் தேதி நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின் எல்லாக் கட்சிகளுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி விவகாரம் குறித்து தமிழகத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுமாறு சட்டப் பேரவை எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், தமிழக அரசை வலியுறுத்தி வந்தார். இதற்காக தமிழக நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வத்தைச் சந்தித்துப் பேசியுள்ளார். அனைத்துக் கட்சிக் கூட்டத்தைத் தமிழக அரசு கூட்டவில்லை என்றால், திமுகவே அனைத்துக் கட்சிகளையும் அழைத்துக் கூட்டத்தை நடத்தும் என்றும் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் வரும் 25ம் தேதி காலை 10 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதில் பங்கேற்க வருமாறு திமுக பொருளாளர் மு.க. ஸ்டாலின், அனைத்துக் கட்சி தலைவர்களுக்கும், அனைத்து விவசாய சங்கத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வகையில், அனைத்துக் கட்சி கூட்டத்தில் அதிமுக கலந்து கொள்ள வேண்டும் என்று கோரி, அதிமுக பொதுச் செயலாளர் பெயருக்கும் மு.க. ஸ்டாலின் அழைப்புக் கடிதம் அனுப்பியதாகவும், அதனை அதிமுகவினர் வாங்க மறுத்தால் அதிமுக தலைமைக் கழக முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

மேலும் படிக்க