• Download mobile app
29 Mar 2024, FridayEdition - 2970
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

MeToo பதில் சொல்லுங்கள் அல்லது பதவி விலகுங்கள்! மத்திய அமைச்சர் எம்.ஜே அக்பருக்கு எதிராக காங்கிரஸ் கடும் சாடல்

October 10, 2018 தண்டோரா குழு

மத்திய அமைச்சர் எம்.ஜெ.அக்பர் தன் மீதான பாலியல் புகாருக்கு உரிய விளக்கம் அளிக்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

உலகம் முழுக்க ஒரு ஹேஸ்டேக் பல புயல்களை,பல குற்றச்சாட்டுகளை,பல தீர்வுகளை,பல சர்ச்சைகளை சுமந்து வலம் வருகிறது என்றால் அது “மீடூ” “#MeToo” ஹேஷ்டேக் தான்.அமெரிக்கா,ஆஸ்திரேலியா என்று சுற்றிய இந்த ஹேஷ்டேக் தற்போது இந்தியாவிலும் பிரபலமடைந்துள்ளது.

பாலியல் ரீதியாகப் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்லாமல் புழுங்கிக்கொண்டிருந்த பெண்கள்,சமூகவலைதளங்களில்,மீடூ இயக்கத்தின் மூலம் தற்போது தங்களுக்கு ஏற்பட்ட நிலையைக் கூறி வருகின்றனர்.திரையுல பிரபலங்கள் தொடங்கி பல்வேறு துறையிலும் நடந்த பாலியல் ரீதியான பாதிப்புகளை பெண்கள் வெளியிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் மத்திய அமைச்சர் எம்.ஜெ.அக்பர் மீது பெண் பத்திரிக்கையாளர் ஒருவர் சமீபத்தில் டுவிட்டர் மூலம் பாலியல் புகார் அளித்தார்.அவரால் பல பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் குற்றம் சாட்டி இருந்தார்.இந்த புகார் குறித்து இதுவரை மத்திய அமைச்சர் எந்த பதிலும் அளிக்கவில்லை.இந்த விவகாரம் எம்.ஜே.அக்பருக்கு மட்டுமின்றி மத்திய அரசுக்கும் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.தற்போது இந்த விவகாரத்தை எதிர்கட்சியான காங்கிரஸ் கையில் எடுத்துள்ளது.

இந்நிலையில்,தனது துறையின் இணையமைச்சர் மீது பாலியல் ரீதியான புகார் வந்துள்ள நிலையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் அமைதி காப்பது ஏன்? அமைச்சர் அக்பர் இதுகுறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.இல்லாவிட்டால் பதவி விலக வேண்டும்.இந்த விவகாரம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என காங்., எம்.பி., ஜெய்பால் ரெட்டி தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க