• Download mobile app
23 Apr 2024, TuesdayEdition - 2995
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

“மோடி அவர்களின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி”-வைரமுத்து டிவீட்

February 17, 2018 தண்டோரா குழு

“மோடி அவர்களின் கூற்று பெருமிதம் தருகிறதுமகிழ்ச்சி என கவிஞர் வைரமுத்து டுவீட் செய்துள்ளார்.

டெல்லியில் டால்கோட்ரா விளையாட்டு அரங்கத்தில் மத்திய அரசு ஏற்பாடு செய்திருந்த தேர்வுகள் தொடர்பான விவாத நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமர் நரேந்திர மோடி நேற்று பேசிகையில் சமஸ்கிருதத்தை விட அழகான தமிழ் மொழி தனக்கு தெரியாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என கூறியிருந்தார்.

இந்நிலையில், அதற்கு கவிஞர் வைரமுத்து மோடி பெயரை குறிப்பிட்டு டுவீட் செய்துள்ளார். அதில், தமிழ்மொழி சமஸ்கிருதத்தைவிடத் தொன்மையானது என்று குறிப்பிட்டிருக்கும் பிரதமர் மோடிஅவர்களின் கூற்று பெருமிதம் தருகிறது; மகிழ்ச்சி.மூத்த மொழிக்கான முன்னுரிமையும் பெருமையும் தமிழுக்கு வழங்கப்படும் என்று நம்புகிறேன். அதற்கான அறிகுறியென்றே இதை அறிகின்றேன் எனக் குறிபிட்டுள்ளார்.

மேலும் படிக்க