• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மே 1-ம் தேதி திருப்பூரில் விஜயகாந்த் சிறப்புரையாற்ற உள்ளார்

April 28, 2017 தண்டோரா குழு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மே 1-ம் தேதி தே.மு.தி.க., சார்பில் நடைபெற உள்ள பொதுக்கூட்டத்தில் தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் பேச உள்ளார் என அக்கட்சி அறிக்கை வெளியிட்டுள்ளது.

இது குறித்து தே.மு.தி.க., வெளியிட்ட அறிக்கையில்

“ தே.மு.தி.க., சார்பில் மே தின பொதுக்கூட்டம் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் பகுதியில் மே 1-ம் தேதி மாலை 5 மணியளவில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில், தொழிலாளர்களின் உரிமைக்காக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பிரேமலதா விஜயகாந்த் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.

எனவே, தலைமை கழக நிர்வாகிகள், தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், பேரவையில் இணைக்கப்பட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர், மகளிர் அணியினர் மற்றும் தொண்டர்கள், பொதுமக்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.” என்று அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க