• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் ஆர்ப்பாட்டம்

August 19, 2017 தண்டோரா குழு

மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் சார்பில் கோவையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தியாவில் மாட்டின் பெயரால் மனிதர்களை அடித்துக் கொள்வதை கண்டித்து கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் “கொன்றது ஆர்.எஸ்.எஸ் நான் சாட்சி” என்ற முழக்கத்தை முன்வைத்தும், கொடூர கொலைகளுக்கு எதிரான இந்தியா என்ற தலைப்பில் தேசம் தழுவிய பிரச்சாரம் நடைபெற்றுவருகிறது.இதன் ஒரு பகுதியாக கோவை ஆத்துப்பாலம் பகுதியில் வைத்து இந்தியாவில் மாட்டின் பெயரால் நடைபெறும் கொலைகளுக்கு ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என்று சாட்சி பகரும் விதமாக மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது.

கேம்பஸ் ஃப்ரண்ட்டின் கோவை மாவட்ட தலைவர் K. பீர் முஹம்மது தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக கேம்பஸ் ஃப்ரண்ட்-ன் மாநில பொது செயலாளர் L.அப்துல் ரஹ்மான், பாப்புலர் ஃப்ரண்ட் – ன் மாநில பொருளாளர் N.M.ஷாஜஹான்,நேஷனல் விமன்ஸ் ஃப்ரண்ட் கோவை மாவட்ட செயற்குழு உறுப்பினர்M.ஆயிஷா சித்திகா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தின் போது மாட்டின் பெயரால் நடைபெறும் அனைத்து கொலைகளுக்கும் ஆர்.எஸ்.எஸ் தான் காரணம் என கோசங்கள் எழுப்பப்பட்டன.

இதையடுத்து தடை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் படிக்க