• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

பத்ம விருதுகளை பொதுமக்களே பரிந்துரைக்கலாம்

August 19, 2017 தண்டோரா குழு

மத்திய அரசின் பத்ம விருதுகளுக்கு தகுதியுள்ளோரின் பெயர்களை இணையதளம் மூலம் பொதுமக்களே பரிந்துரைக்கலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கலை, இலக்கியம், கல்வி, மருத்துவம், சமூக சேவை, அறிவியல், வணிகம், தொழில்துறை, பொது விவகாரங்கள், விளையாட்டு உள்ளிட்ட துறைகளில் மிகச்சிறந்து விளங்குவோருக்கு மத்திய அரசு பத்மவிருதுகளை வழங்கி வருகிறது. இந்த விருதுகளை பொதுவாக மத்திய அமைச்சர்கள் பரிந்துரை செய்வர்.இந்நிலையில் இனி இந்த விருதுகளை பொது மக்கள் பரிந்துரை செய்யலாம் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த விருதுகளை www.padmaawards.gov.in என்ற இணையதளத்தில் செப்டம்பர் மாதம் 15-ஆம் தேதி வரை பரிந்துரைகளை அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது.

மேலும் படிக்க