• Download mobile app
19 Apr 2024, FridayEdition - 2991
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

துப்பாக்கி சூடு விவாகரம் தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்

May 23, 2018 தண்டோரா குழு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், போராட்டக்காரர்கள் மீது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இந்த சம்பவம் நாடெங்கும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தி 18க்கும் மேற்பட்ட கிராம மக்கள் 100-ஆவது நாளாக நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தடையை மீறி மக்கள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்குள் பேரணியாக ஆயிரக்கணக்கானோர் நுழைந்தனர். இதையடுத்து காவல் துறையினருக்கு மக்களுக்கும் இடையே மோதல் வெடித்தது. இதையடுத்து காவல்துறையினர் போராட்டக்காரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் உயிரிழந்தனர்.

இச்சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.இதற்கிடையில் தூத்துக்குடியில் நடந்த துப்பாக்கிச்சூடு குறித்து விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனை தமிழக அரசு நியமனம் செய்து உள்ளது.இந்நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சம்பவம் குறித்து தமிழக அரசுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இது தொடர்பாக போலீஸ் டிஜிபி, தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி 2 வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டு உள்ளது.

மேலும் படிக்க