• Download mobile app
24 Apr 2024, WednesdayEdition - 2996
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தாலி கட்டும் நேரத்தில் பைக்குடன் மண்டபத்திற்குள் வந்து மணப்பெண்ணை அழைத்து சென்ற காதலன்

April 23, 2018 தண்டோரா குழு

உபியில் சினிமா பாணியில் தாலி கட்டும் கடைசி நேரத்தில் பைக்குடன் வந்த மண்டபத்திற்குள் வந்த இளைஞர் இருவர் மணப்பெண்ணை அழைத்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சினிமாவில் தான் காதலிக்கு திருமணம் ஆகும் கடைசி நேரத்தில் ஹீரோ மணப்பெண்னை அழைத்து செல்லும் காட்சியை அதிகமாக பார்த்திருப்போம்.அதேபோன்ற ஒரு சம்பவம் தற்போது நடந்துள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூர் மாவட்டத்தில் மணவறையில் மணமகன் மற்றும் மணப்பெண் அமர்ந்திருந்தனர்.தாலி கட்ட நேரம் ஆனதால் அனைவரும் ஆசிர்வதிக்க எதிர்பார்ப்போடு இருந்தனர்.இந்நிலையில் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் சினிமா பாணியில் ஒருவர் பைக்கில் திருமண மண்டபத்துக்குள் வந்தார்.அனைவரும் அவரை ஆச்சரியமாக பார்த்துக் கொண்டிருக்கையில்,அவர் மணமகளின் கையை பிடித்து பைக்கிலேயே உட்கார வைத்து வேகமாக பைக்கில் தலைமறைவாகி விட்டார். இதனால் திருமண வீட்டில் பரபரப்பு ஏற்பட்டது.பின்னர், போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

அப்போது, விசாரணையில் அவர்கள் இருவரும் காதலித்தது தெரியவந்தது.ஆனால்,பெண் வீட்டார் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பெண்ணை,வேறு ஒரு ஆணுக்கு மணம் முடித்து வைக்க ஏற்பாடு செய்துள்ளனர்.இருப்பினும்,காதலன் சரியான நேரத்திற்கு வந்து மணமகளை அழைத்துச் சென்றுள்ளார்.

மேலும் படிக்க