• Download mobile app
20 Apr 2024, SaturdayEdition - 2992
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

தமிழக அரசியல் நிலவரம் பற்றி கமல்ஹாசனிடம் ஆலோசனை நடத்தினேன் – ராகுல் காந்தி

June 20, 2018 தண்டோரா குழு

தமிழக அரசியல் நிலவரம் பற்றி கமல்ஹாசனிடம் ஆலோசனை நடத்தினேன் என்று காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கிய நடிகர் கமல்ஹாசன்,அதை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்ய விண்ணப்பித்திருந்தார்.இதையடுத்து,யாருக்கும் ஆட்சேபம் இருந்தால் அதை தெரிவிக்குமாறு தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.ஆனால்,யாரும் ஆட்சேபம் தெரிவிக்காததையடுத்து, கமல்ஹாசனை தேர்தல் ஆணையம் அழைத்திருந்ததாக கூறப்படுகிறது.

தேர்தல் அங்கீகாரம் பெறுவது தொடர்பாக கமல்ஹாசன் இன்று டெல்லி சென்றார்.பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர்,விரைவில் தமது கட்சிக்கு அங்கீகாரம் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.இதையடுத்து மாலையில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை அவரது இல்லத்தில் சந்தித்தார்.

இந்த சந்திப்பு குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில், “இன்று டெல்லியில் கமல்ஹாசனுடன் சந்திப்பு மகிழ்ச்சியாக இருந்தது.தமிழக அரசியல் நிலவரம் உள்பட எங்களுடைய இரண்டு கட்சிகளைப் பற்றி நாங்கள் விரிவாக விவாதித்தோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் படிக்க