• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

சட்டமன்ற தலைமையை விட தொண்டர்களின் மனநிலைதான் முக்கியம் – செம்மலை

April 28, 2017 தண்டோரா குழு

சட்டமன்ற தலைமையை விட தொண்டர்களின் மனநிலைதான் முக்கியம் என ஓ.பன்னீர்செல்வம் அணியை சேர்ந்த செம்மலை தெரிவித்துள்ளார்.சேலத்தில் அதிமுக தொண்டர்களை சந்தித்து பேசினார் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர் செம்மலை.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்,

எடப்பாடி பழனிசாமி அணியுடன் இணைய வேண்டாம் என்பது தொண்டர்களின் கருத்து தொண்டர்களின் கருத்தை தலைவர் ஓபிஎஸ்சிடம் தெரிவிப்போம். சட்டமன்ற தலைமையை விட தொண்டர்களின் மனநிலை தான் முக்கியம். ஜெயலலிதா மரணம் குறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்தால் போதும். நிபந்தனைகளை ஏற்றால் மட்டுமே பேச்சுவார்த்தைக்கான சுமுகமான சூழல் ஏற்படும் என்றார்.

மேலும், ஊழலற்ற ஆட்சியை ஓ.பன்னீர்செல்வத்தால் மட்டுமே தர முடியும். பேச்சுவார்த்தை நடந்தால் நல்லதே நடக்கும் என்று எதிர்ப்பார்ப்பதாக செம்மலை கூறினார்.

மேலும் படிக்க