May 22, 2018 தண்டோரா குழு
கோவையில் நிபா வைரஸ் குறித்து மக்கள் பீதி அடைய வேண்டாம் என்று கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் டீன் அசோகன் தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்,
நிபா வைரஸ் காய்ச்சல் பரவி வருவதால்,கேரளா எல்லையோரம் அமைந்துள்ள கோவையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.கேரளாவில் இருந்து காய்ச்சல் காரணமாக வருபவர்களை தனி வார்டு மற்றும் மருத்துவக் குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் முன்னெச்சரிக்கையாக இருக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவித்தார்.
மேலும்,நிபா வைரஸ் நோய் குறித்து மக்கள் யாரும் பீதி அடைய வேண்டாம் என்றும் சாதாரண காய்ச்சலாக இருந்தாலும் சுய மருத்துவம் மேற்கொள்ளாமல் பொதுமக்கள் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.