• Download mobile app
25 Apr 2024, ThursdayEdition - 2997
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

கோவை:பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 20, 2018 தண்டோரா குழு

கோவையில் பெட்ரோல் டீசல் விலை உயர்வைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து அதிகரித்து வரும் பெட்ரோல்,டீசல் விலைகளின் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்து வருகிறது.இதனால் சாமானிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பெட்ரோல்,டீசல் விலையை குறைக்க கோரி பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.அதன்படி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பாக திரண்ட அக்கட்சியினர் பெட்ரோல்,டீசல் விலை உயர்வை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

மேலும் பெட்ரோல் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயிக்கும் பெட்ரோலிய நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்துவிட்டு அரசே விலை நிர்ணயம் செய்யும் முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறித்தினர்.

மேலும் படிக்க