March 20, 2018 தண்டோரா குழு
குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பாக அதுல்ய மிஸ்ரா வரும் 22-ஆம் தேதி விசாரணையைத் தொடங்குகிறார்.
குரங்கணி தீவிபத்து தொடர்பாக விசாரணை நடத்தும் அதிகாரியாக வருவாய்த்துறை மற்றும் பேரிடர் மேலாண்மை முதன்மை செயலர் அதுல்ய மிஸ்ரா நியமனம் செய்யப்பட்டார்.
குரங்கணி தீ விபத்து தொடர்பாக 2 மாதத்தில் விசாரணை நடத்தி அறிக்கை அளிக்க அதுல்ய மிஸ்ராவுக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.மேலும்,இது போன்ற சம்பவங்கள் எதிர்காலங்களில் நடக்காமல் இருக்க தேவையான பரிந்துரைகள் அளிக்கவும் உத்தரவிடப்பட்டிருந்தது.
இந்நிலையில், குரங்கணி காட்டுத் தீ விபத்து தொடர்பான விசாரணையை அதுல்ய மிஸ்ரா மார்ச் 22-ல் தொடங்குகிறார் என்று தகவல் வெளியாகியுள்ளது.