February 17, 2018
எல்.பி.ஜி. டேங்கர் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்துள்ளது.
மாநில வாரியான டெண்டர் முறைக்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 6 நாட்களாக நடைபெற்ற எல்பிஜி டேங்கர் லாரிகளின் வேலைநிறுத்த போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
கடந்த 6 நாட்களாக நடைபெற்று வந்த இந்த வேலை நிறுத்த போராட்த்தால் தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா, கேரளா மற்றும் புதுச்சேரியில் எல்.பி.ஜி டேங்கர் லாரிகள் இயங்கவில்லை.
இந்நிலையில் டேங்கர் லாரி உரிமையாளர்கள் நடத்திய பேச்சுவார்த்தையில் எண்ணெய் நிறுவனம் திருத்தம் செய்ததால் வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.