• Download mobile app
27 Apr 2024, SaturdayEdition - 2999
FLASH NEWS
  • வள்ளுவரைப் பற்றிய அடிப்படை புரிதல் ஆளுநருக்கு இல்லை: கனிமொழி
  • தெலங்கானா முதலமைச்சராக பதவியேற்றார் ரேவந்த் ரெட்டி;
  • தமிழகத்தில் இயல்பை விட இந்த ஆண்டு, வடகிழக்கு பருவமழை குறைவு –
  • மிக்ஜாம் புயல்: தமிழ்நாட்டுக்கு ரூ.450 கோடி நிதி ஒதுக்கீடு!
  • மத்தியில் ஆட்சிக்கு வந்ததும் சாதிவாரி கணக்கெடுப்பை நடத்துவோம்-ராகுல் காந்தி

உத்தரபிரதேஷத்தில் அசைவ உணவு இடம்பெறாததால் நின்று போன திருமணம்

April 28, 2017 தண்டோரா குழு

உத்தரபிரதேஷத்தில் அசைவ உணவு இடம்பெறாததால் திருமணம் நின்று போன,சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேஷ மாநிலத்தின் முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவி ஏற்ற பிறகு, சட்ட விரோதமாக நடத்தப்படும் அனைத்து இறைச்சி கூடங்களையும் மூட உத்தரவிட்டார். இதனால், மாநிலம் முழுவதிலும் இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது. சில பகுதியில் அரசிடமிருந்து உரிய அனுமதியுடன் இறைச்சி கடைகள் செயல்பட்டு வருகிறது. ஆனால், அந்த கடைகளில் இறைச்சியின் விலைகள் மிக அதிகமாக இருக்கிறது.

இந்நிலையில், முசாபர் மாவட்டத்தில் வியாழக்கிழமை திருமண நிகழ்ச்சியில், விருந்து ஏற்பாடு செய்யப்படிருந்தது. பொதுவாக அந்த பகுதியில் திருமணம் உள்ளிட்ட அனைத்து விஷேசங்களுக்கும் எருமை மாட்டுக்கறி பரிமாறப்படுவது வழக்கம். ஆனால், இறைச்சிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், அந்த திருமணத்தில் சைவ உணவு பரிமாறப்பட்டது.

இதை கண்ட மணமகன் வீட்டார் கடும் கோபம் அடைந்துள்ளனர். இறைச்சி கிடைக்காத சூழ்நிலையை பெண்ணின் வீட்டார் எடுத்துக்கூறியும் அதை ஏற்க மறுத்துவிட்டனர். இதையடுத்து, பஞ்சாயத்தை கூட்டி இந்த பிரச்சனைக்கு முடிவு காண முயன்றனர். இருப்பினும், மாப்பிளை வீட்டார் சமாதானம் ஆகாததை கண்ட மணப்பெண் கோபம் கொண்டு, திருமணத்தை நிறுத்தியுள்ளார்.

திருமணதிற்கு வந்திருந்த இளைஞர் ஒருவர், நடந்த அனைத்தையும் கண்டு, அந்த பெண்ணை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்தார். அவருடைய விருப்பத்தை மணப்பெண்ணும் முழுமனதோடு ஏற்றுக்கொண்டார். அவர்களுடைய திருமணதிற்கு பெண்ணின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சம்மதம் தெரிவித்தனர். சைவ விருந்துடன் இனிதே திருமணம் நடைபெற்றது.

மேலும் படிக்க